தற்போதைய செய்திகள்

கட்டில் அடியில் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி.. தீ பிடித்து எரிந்த நைலான் கட்டில் - மூதாட்டி பலி

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகரில் 95 வயதான பொன்செட்டி தனது மனைவி அமிர்தம்மாளுடன் வசித்து வந்தார். அப்பகுதியில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வீடு இருட்டாக இருந்ததால் வயதான மூதாட்டி அமிர்தம்மாள் அப்பகுதியில் உள்ள கடையில் மெழுகுவர்த்தி வாங்கிவந்து தான் படுத்திருக்கும் நைலான் கட்டில் அடியில் வைத்து பற்ற வைத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியிலிருந்து தீ கட்டிலுக்கு பரவியதில் அதன் மேல் படுத்திருந்த அமிர்தம்மாள் உடல் கருகி உயிரிழந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தரையில் படுத்து இருந்த மூதாட்டியின் கணவர் பொன் செட்டியை பத்திரமாக மீட்டு வெளியேற்றினர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"