தற்போதைய செய்திகள்

கட்டில் அடியில் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி.. தீ பிடித்து எரிந்த நைலான் கட்டில் - மூதாட்டி பலி

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகரில் 95 வயதான பொன்செட்டி தனது மனைவி அமிர்தம்மாளுடன் வசித்து வந்தார். அப்பகுதியில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வீடு இருட்டாக இருந்ததால் வயதான மூதாட்டி அமிர்தம்மாள் அப்பகுதியில் உள்ள கடையில் மெழுகுவர்த்தி வாங்கிவந்து தான் படுத்திருக்கும் நைலான் கட்டில் அடியில் வைத்து பற்ற வைத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியிலிருந்து தீ கட்டிலுக்கு பரவியதில் அதன் மேல் படுத்திருந்த அமிர்தம்மாள் உடல் கருகி உயிரிழந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தரையில் படுத்து இருந்த மூதாட்டியின் கணவர் பொன் செட்டியை பத்திரமாக மீட்டு வெளியேற்றினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்