தற்போதைய செய்திகள்

கட்டில் அடியில் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி.. தீ பிடித்து எரிந்த நைலான் கட்டில் - மூதாட்டி பலி

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகரில் 95 வயதான பொன்செட்டி தனது மனைவி அமிர்தம்மாளுடன் வசித்து வந்தார். அப்பகுதியில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வீடு இருட்டாக இருந்ததால் வயதான மூதாட்டி அமிர்தம்மாள் அப்பகுதியில் உள்ள கடையில் மெழுகுவர்த்தி வாங்கிவந்து தான் படுத்திருக்கும் நைலான் கட்டில் அடியில் வைத்து பற்ற வைத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியிலிருந்து தீ கட்டிலுக்கு பரவியதில் அதன் மேல் படுத்திருந்த அமிர்தம்மாள் உடல் கருகி உயிரிழந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தரையில் படுத்து இருந்த மூதாட்டியின் கணவர் பொன் செட்டியை பத்திரமாக மீட்டு வெளியேற்றினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்