தற்போதைய செய்திகள்

14 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்... வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீசார் - சென்னையில் பயங்கரம்

தந்தி டிவி

கோயம்பேடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும், இளைஞரை பழிவாங்கவே, தனது தாய் பொய் புகாரை அளித்ததாகவும் சிறுமி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். அதனைத் தொடர்ந்து, உண்மையை கூறிய சிறுமிக்கு, அவரது தாயால் பாதிப்பு ஏற்படும் என்பதால், சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இதனிடையே, சிறுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பொய் புகாரில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்