தற்போதைய செய்திகள்

14 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்... வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீசார் - சென்னையில் பயங்கரம்

தந்தி டிவி

கோயம்பேடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும், இளைஞரை பழிவாங்கவே, தனது தாய் பொய் புகாரை அளித்ததாகவும் சிறுமி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். அதனைத் தொடர்ந்து, உண்மையை கூறிய சிறுமிக்கு, அவரது தாயால் பாதிப்பு ஏற்படும் என்பதால், சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இதனிடையே, சிறுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பொய் புகாரில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ