தற்போதைய செய்திகள்

குஜராத்தில் ஜூன் 15 வரை 95 ரயில்கள் ரத்து

தந்தி டிவி

பிபர்ஜாய் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத்தில் ஜூன் 15-ஆம் தேதி வரை 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குஜராத்தின் போர்பந்தரில் இருந்து தென்மேற்கில் 340 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள பிபர்ஜாய் புயல், வரும் 15-ஆம் தேதி கட்ச் வளைகுடா பகுதியில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, குஜராத் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் பிபர்ஜாய் பாதித்த பகுதிகளில், செவ்வாய்க்கிழமை முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்கும்போது கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என்றும், மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்