தற்போதைய செய்திகள்

குஜராத்தில் ஜூன் 15 வரை 95 ரயில்கள் ரத்து

தந்தி டிவி

பிபர்ஜாய் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத்தில் ஜூன் 15-ஆம் தேதி வரை 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குஜராத்தின் போர்பந்தரில் இருந்து தென்மேற்கில் 340 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள பிபர்ஜாய் புயல், வரும் 15-ஆம் தேதி கட்ச் வளைகுடா பகுதியில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, குஜராத் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் பிபர்ஜாய் பாதித்த பகுதிகளில், செவ்வாய்க்கிழமை முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்கும்போது கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என்றும், மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்