தற்போதைய செய்திகள்

குஜராத்தில் ஜூன் 15 வரை 95 ரயில்கள் ரத்து

தந்தி டிவி

பிபர்ஜாய் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத்தில் ஜூன் 15-ஆம் தேதி வரை 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குஜராத்தின் போர்பந்தரில் இருந்து தென்மேற்கில் 340 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள பிபர்ஜாய் புயல், வரும் 15-ஆம் தேதி கட்ச் வளைகுடா பகுதியில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, குஜராத் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் பிபர்ஜாய் பாதித்த பகுதிகளில், செவ்வாய்க்கிழமை முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்கும்போது கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என்றும், மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"