தற்போதைய செய்திகள்

வேங்கைவயல் சம்பவத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர் -சிபிசிஐடி போலீசார் அதிரடி

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில், டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கு சிபிசிஐடி போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில், முதல் கட்டமாக 11 பேருக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை செய்வதற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அவர்களில் 3 பேர் மட்டுமே டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர். 8 பேர், பரிசோதனைக்கு வர மறுப்பு தெரிவித்து விட்டனர். அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, கடந்த 8-ஆம் தேதி, 10 பேருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், முதல் கட்ட பரிசோதனையில் வர மறுத்த 8 பேருக்கு சிபிசிஐடி போலீசார், சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் அழைக்கும் தேதியில் 8 பேருக்கும் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’