தற்போதைய செய்திகள்

வேங்கைவயல் சம்பவத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர் -சிபிசிஐடி போலீசார் அதிரடி

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில், டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கு சிபிசிஐடி போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில், முதல் கட்டமாக 11 பேருக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை செய்வதற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அவர்களில் 3 பேர் மட்டுமே டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர். 8 பேர், பரிசோதனைக்கு வர மறுப்பு தெரிவித்து விட்டனர். அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, கடந்த 8-ஆம் தேதி, 10 பேருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், முதல் கட்ட பரிசோதனையில் வர மறுத்த 8 பேருக்கு சிபிசிஐடி போலீசார், சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் அழைக்கும் தேதியில் 8 பேருக்கும் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை