தற்போதைய செய்திகள்

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 55 பழங்கால கற்சிலைகள் பறிமுதல் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்..!

தந்தி டிவி

சென்னை, ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஒருவரது வீட்டில் சிலை தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த 55 பழங்கால கற்சிலைகளை போலீசார் கைப்பற்றினர். இவைகள் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடமிருந்து வாங்கப்பட்டதும், அவர் மூலம் கடத்தப்பட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட சில சிலைகளையும் போலீசார் மீட்டு சென்னை கொண்டு வந்தனர். இவ்வாறு, மீட்கப்பட்ட சிலைகள் சென்னை, அசோக்நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு மீட்கப்பட்ட சிலைகள் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்