தற்போதைய செய்திகள்

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 55 பழங்கால கற்சிலைகள் பறிமுதல் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்..!

தந்தி டிவி

சென்னை, ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஒருவரது வீட்டில் சிலை தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த 55 பழங்கால கற்சிலைகளை போலீசார் கைப்பற்றினர். இவைகள் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடமிருந்து வாங்கப்பட்டதும், அவர் மூலம் கடத்தப்பட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட சில சிலைகளையும் போலீசார் மீட்டு சென்னை கொண்டு வந்தனர். இவ்வாறு, மீட்கப்பட்ட சிலைகள் சென்னை, அசோக்நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு மீட்கப்பட்ட சிலைகள் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்