தற்போதைய செய்திகள்

40 மணி நேரத்தில் 500 முறை நில அதிர்வு.. துருக்கியில் ஒவ்வொரு நொடியும் நரகம்.. பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கத்தால், பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது.

துருக்கியில் ஏற்பட்ட அடுத்த‌டுத்த நிலநடுக்கங்களால், துருக்கி மற்றும் சிரியாவில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் மீட்புப் படைகளை அனுப்பியுள்ளன. கட்ட‌ட இடிபாடுகளை அகற்ற அகற்ற, இறந்தவர்களின் சடலங்களாக மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை துருக்கி, சிரியாவில் மொத்தமாக உயிரிழப்பு 12 ஆயிரத்தைக் தாண்டியுள்ளது. ஏராளமான கட்ட‌டங்களின் இடிபாடுகளை அகற்றாத‌தால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், கடந்த 40 மணி நேரத்திற்குள் மட்டும் 500க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 

CM விஜய்யின் கனவு திட்டம் - மாஸாக ரெடியான சிங்கப்பெண் படை - தமிழகமே உற்றுநோக்கும் மொமென்ட்

High Court | Perarivalan | பேரறிவாளன் விவகாரம்.. பார் கவுன்சிலுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || காவல்துறைக்கு நிர்வாக நடுவர் அதிகாரம் - அரசாணைக்கு இடைக்கால தடை

Kavin Case | TN Police | கவின் கொ*ல வழக்கு - நீதிபதி முக்கிய உத்தரவு

BREAKING || கோர்ட்டில் தமிழக அரசு தரப்பு கொடுத்த உறுதி