தற்போதைய செய்திகள்

5 வயது பெண் குழந்தைக்கு தாய்மாமனால் நிகழ்ந்த பயங்கரம் - சிதம்பரத்தில் அதிர்ச்சி

தந்தி டிவி

சிதம்பரத்தில் 5 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தாய்மாமனை, போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனது 5 வயது பெண் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் அப்பெண்ணின் அண்ணன் மதுபோதையில், பெண்ணின் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், பாலியல் வன்கொடுமை செய்த நபரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்