தற்போதைய செய்திகள்

தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் - மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

தந்தி டிவி
• தமிழகத்தில் சேலம், நெய்வேலி, வேலூர், தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட விமான நிலையங்கள், உதான் திட்டத்தின்கீழ் விமான சேவையை தொடங்க அடையாளம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். • தமிழகத்தில் விமானநிலையங்களில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில், காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத் கேள்வி எழுப்பியிருந்தார். • இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா, தமிழகத்தில் சென்னை, திருச்சி மதுரை, கோவை தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களை மேம்படுத்தவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். • சேலம், நெய்வேலி, வேலூர், தஞ்சை, ராமநாதபுரத்தில், உதான் திட்டத்தின் கீழ் விமான சேவைகளைத் தொடங்க அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சேலம் விமான நிலையத்தில் உதான் திட்டத்தில் விமான சேவை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். • மேலும், 2024ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள ஆயிரம் வழித்தடங்களில் விமான சேவையை தொடங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்