தற்போதைய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையை அடுத்த எழுத்துர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கும், ராஜசேகர் என்பவருக்கும் இடையே நில பிரச்சனை இருந்துள்ளது. கோவிந்தன் தனது தம்பிகள் கலியமூர்த்தி சங்கர் மற்றும் கோவிந்தன் அம்மா உண்ணாமலை கோவிந்தன் மனைவி சுசிலா ஆகியோருடன் தனது நிலத்தை பார்க்க சென்றுள்ளார். அப்போது ராஜசேகர் வழிமறித்து பிரச்சனை ஏற்படுத்தி அசிங்கமாக திட்டியதுடன் கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் உண்ணாமலை, சுசிலா, கலியமூர்த்தி சங்கர் ஆகிய நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த 4 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இரு தரப்பினர் மோதிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்