தற்போதைய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை...அனாதையாய் நிற்கும் குழந்தை - கர்நாடகாவை பதற வைத்த சம்பவம்

தந்தி டிவி

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டம் கார்வார் அருகே, ராஜீவ் பட் என்பவர் தனது தாய், தந்தை, மனைவி, குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குழந்தையை தவிர மீதமுள்ள நால்வரும் அரிவாளால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சொத்து பிரச்னை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்