தற்போதைய செய்திகள்

4 மாணவிகள் மயக்கம் - பள்ளியின் தாளாளர் மீது வழக்கு... மதுரையில் பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

மதுரை மாவட்டம் திருப்பாலை அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிக்கு சொந்தமான பேருந்து ஒன்று மாலையில் பள்ளி முடிந்து மாணவிகளை ஏற்றி கிளம்பியது.

அப்போது, அளவுக்கு அதிகமாக 130 க்கும் மேற்பட்ட மாணவிகளை பேருந்து ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதில், 4 மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பானது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்த புகாரில் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட முதன்மை கல்வி இயக்குநர் உறுதியளித்திருந்தார்.

இதையடுத்து, பள்ளியின் தாளாளார், தலைமையாசிரியர் மற்றும் பேருந்து ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"