தற்போதைய செய்திகள்

ஒரே வாரத்தில் 4 கோடி பேர்..மீண்டும் பீதியை கிளப்பும் சீனா -அடுத்த மாதத்தில் உச்சம் | China

தந்தி டிவி

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது, ஜூன் மாத இறுதிக்குள் உச்சத்தை அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கடந்த 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2 ஆண்டுகள் உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும், அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து, தாக்கி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தோன்றிய இடமாக கருதப்படும் சீனாவில், ஏப்ரலில் இருந்து ஒமிக்ரான் XBB என்ற உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த அலை, இந்த மாத இறுதிக்குள், ஒரு வாரத்தில் 4 கோடி பேரைத் தாக்கும் என்றும், அடுத்த மாத இறுதியில் உச்சம் தொட்டு, ஒரு வாரத்தில் ஆறரை கோடி பேரைத் தாக்கும் என்றும் மருத்துவர்கள் கணித்துள்ளனர். இந்த புதிய அலையை எதிர்கொள்வதற்கு புதிய தடுப்பூசியுடன் சீனா தயாராகி வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை