தற்போதைய செய்திகள்

சென்னை ஏர்போர்ட்டில் 3.5 கி. தங்கம் பறிமுதல் - வசமாக சிக்கிய 4 பேர்

தந்தி டிவி

அபுதாபியில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட மூன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி, அபுதாபியில் இருந்து சென்னைக்கு வந்த 4 பயணிகளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாதித்தனர். 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர். இதில், அவர்களிடம் இருந்து 1 கோடியே 83 லட்சம் மதிப்பிலா 3 கிலோ 422 கிராம் தங்கம், 25 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள், லேப்டாப்கள், சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், 4 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்