தற்போதைய செய்திகள்

மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட தந்தையை கட்டையால் தாக்கிய 3 பேர்

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, மகளை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட தந்தையை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அத்திமடை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகள், பள்ளி முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த வீரசேகரன், மணிகண்டன், ஜீவா ஆகிய 3 பேர், மாணவியை கிண்டல் செய்து, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனை தட்டிக் கேட்ட மாணவியின் தந்தையை, கட்டையால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

புகாரின் பேரில், மணிகண்டனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு