தற்போதைய செய்திகள்

மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட தந்தையை கட்டையால் தாக்கிய 3 பேர்

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, மகளை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட தந்தையை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அத்திமடை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகள், பள்ளி முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த வீரசேகரன், மணிகண்டன், ஜீவா ஆகிய 3 பேர், மாணவியை கிண்டல் செய்து, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனை தட்டிக் கேட்ட மாணவியின் தந்தையை, கட்டையால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

புகாரின் பேரில், மணிகண்டனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்