தற்போதைய செய்திகள்

மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட தந்தையை கட்டையால் தாக்கிய 3 பேர்

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, மகளை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட தந்தையை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அத்திமடை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகள், பள்ளி முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த வீரசேகரன், மணிகண்டன், ஜீவா ஆகிய 3 பேர், மாணவியை கிண்டல் செய்து, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனை தட்டிக் கேட்ட மாணவியின் தந்தையை, கட்டையால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

புகாரின் பேரில், மணிகண்டனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்