தற்போதைய செய்திகள்

வாத்து என நினைத்து அன்னப் பறவையை கொன்று தின்ற 3 சிறுவர்கள் அதிரடி கைது

தந்தி டிவி

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கிராமத்தில் அன்னப் பறவையைக் கொன்று தின்ற குற்றத்திற்காக 3 பதின்ம வயதினர் கைது செய்யப்பட்டுள்ளனர். Manlius எனும் கிராம மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட பெண் அன்னப் பறவையும், அதன் 4 குஞ்சுகளும் மாயமாகின. அதன் குஞ்சுகள் கண்டறியப்பட்ட நிலையில், பெண் அன்னப் பறவை கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. Faye என்ற அந்த அன்னத்தை, வாத்து என நினைத்துப் பிடித்துச் சென்ற 3 பதின்ம வயதினர் அதை உறவினர் வீட்டில் வைத்து கொன்று சமைத்து தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பதின்ம வயதினரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை