தற்போதைய செய்திகள்

"வேலூர் மாவட்டத்தில் 23 இடங்கள் பாதிக்கப்பட கூடியவை" - வேலூர் ஆட்சியர் அறிக்கை

தந்தி டிவி

"வேலூர் மாவட்டத்தில் 23 இடங்கள் பாதிக்கப்பட கூடியவை" - வேலூர் ஆட்சியர் அறிக்கை

வடகிழக்கு பருவ மழை பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் 23 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடியவையாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், 26 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மழை, வெள்ளம் தொடர்பாக தனி நபர்கள் தெரிவிக்கும் செய்திகளை பொது மக்கள் கருத்தில் கொள்ளக்கூடாது என அறிவுறுத்திய ஆட்சியர், அரசின் மூலம் வெளியிடப்படும் செய்திகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என, தெரிவித்தார். மேலும், குளம், குட்டை, ஏரி ஆகிய நீர்த் தேக்கங்களில் குழந்தைகளை விளையாடவோ, செல்ஃபி எடுக்கவோ பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என, ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்