தற்போதைய செய்திகள்

"2000 ரூபாய் நோட்டு செல்லாது".. தொழிலதிபரிடம் சுங்கச்சாவடி ஊழியர் தகராறு..

தந்தி டிவி

கோவை அருகே உள்ள சுங்கச்சாவடியில், சுங்கசாவடி ஊழியர் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை கணியூர் சுங்கச்சாவடியில் தொழிலதிபர் ஒருவர், கட்டணம் செலுத்துவதற்காக 2 ஆயிரம் ரூபாய் நோட்டை அளித்துள்ளார்.

அப்போது சுங்கச்சாவடி ஊழியர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என கூறி வாங்க மறுத்துள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது பொதுமக்கள் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என தெரிவித்தது யார் என சுங்கச்சாவடி ஊழியரிடம் கேள்வியெழுப்பினர்.

இதனையடுத்து சுங்கச்சாவடி ஊழியர் 2000 ரூபாய் நோட்டை பெற்று கொண்டார். இந்த சம்பவத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்