தற்போதைய செய்திகள்

"ரூ.100-க்கு 200 மில்லி பெட்ரோல்.. என்னங்க இது அக்கிரமமா இருக்கு" - பங்கை ரவுண்டு கட்டிய வாகன ஓட்டிகள்

தந்தி டிவி

செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், ராஜசேகரன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில், 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார். ஆனால் 200 மில்லி பெட்ரோல் மட்டுமே நிரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பங்க் ஊழியரிடம் கேட்டபோது, 100 ரூபாய்க்கான பெட்ரோல் நிரப்பப்பட்டதாக, மீட்டர் காட்டுவதாக கூறியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ராஜசேகருக்கு ஆதரவாக சிலர் பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்டனர். தொடர்ந்து மெக்கானிக்கை வைத்து சோதித்த பார்த்தபோது, வாகனத்தில் 200 மில்லி லிட்டருக்கு மேல் பெட்ரோல் இல்லை. இதனால் விவகாரம் தீவிரமடைந்த நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பெட்ரோல் பங்க் நிர்வாகம், இனி இதுபோன்று நடக்காது என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்