தற்போதைய செய்திகள்

20 வங்கிகள்.. ரூ. 4,037.87 கோடி.. பணத்தை சுருட்டிய தனியார் நிறுவனம் | Bank Fraud | Kolkata

தந்தி டிவி

கொல்கத்தாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம் 4 ஆயிரத்து 37 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி மோசடியை அரங்கேற்றியிருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்ததுள்ளது.

யூனியன் வங்கி கொடுத்த புகாரில் விசாரணையை மேற்கொண்ட சிபிஐ, கார்ப்பரேட் பவர் நிறுவனம் 4 ஆயிரத்து 37 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி மோசடியை அரங்கேற்றியிருப்பதாக வழக்குப்பதிவு செய்ததுள்ளது. அந்நிறுவனத்தின் இயக்குநர்கள், அதிகாரிகளுக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனம் 20 வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. மும்பை, கொல்கத்தா, விசாகப்பட்டினம் உள்பட 16 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. 2009 மற்றும் 2013 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நிறுவனம் முறைகேடான கணக்குகளை சமர்பித்து மோசடி செய்துள்ளதாகவும், போலி கணக்குகளை தொடங்கி நிதியை பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’