தற்போதைய செய்திகள்

கைநழுவி போன 2 உலகக்கோப்பைகள்.. கூண்டோடு தூக்கி அடித்த BCCI - அதிரடி மாற்றம்..!

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ சேத்தன் சர்மா தலைமையிலான வீரர்கள் தேர்வுக் குழுவைக் கூண்டோடு கலைத்து உள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வி அடைந்து வெளியேறியது.

இந்த தொடரில் இந்திய அணிக்கான வீரர்கள் தேர்வு சரிவர செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, மண்டல வாரியான தேர்வுக்குழு தலைவர்கள் ஹர்வீந்தர் சிங், சுனில் ஜோஷி, தெபாஷிஸ் மொஹந்தி ஆகிய 4 பேரை தேர்வுக்குழுவில் இருந்து அதிரடியாக பிசிசிஐ நீக்கி உள்ளது.

புதிதாக 5 தேர்வுக் குழு தலைவர் பதவிகளுக்கு, வருகிற 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பிசிசிஐ அறிக்கை வெளியிட்டு உள்ளது. 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ