தற்போதைய செய்திகள்

குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு - திருச்சியில் சோகம்

தந்தி டிவி

திருச்சியில் குளத்தில் மூழ்கிய இரண்டு சிறார்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ராமச்சந்திரா நகரில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சையது, தனது நண்பன் ஆதிலுடன் சைக்கிள் ஓட்டி பழகிக் கொண்டிருந்தான். நீண்ட தூரம் சென்ற சிறார்கள் நீண்ட நேரமாகியும் வராததால் பெற்றோர்கள் தேடிச் சென்றுள்ளனர். சிறுவர்கள் ஓட்டிச் சென்ற சைக்கிள், அவர்களின் துணி குளக்கரையில் இருப்பதை பார்த்த பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரத்திற்கு பிறகு, இரு சிறுவர்களின் உடலை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தெரு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’