தற்போதைய செய்திகள்

150 ரயில்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதா? - இந்திய ரயில்வே பரபரப்பு விளக்கம்

தந்தி டிவி

150 பயணிகள் ரயில்கள், தனியார் வசம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை இந்திய ரயில்வே மறுத்துள்ளது.

பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 150 பயணிகள் ரயில்களை, பராமரிப்பு மற்றும் இயக்கப் பணிகளுக்காக இந்திய ரயில்வே, தனியார் வசம் ஒப்படைக்க போவதாகவும், அதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டிருப்பதாகவும், அவ்வாறு ஒப்படைக்கப்படும் ரயில்களுக்கு தனியார் அமைப்பினரே கட்டணம் நிர்ணயிப்பார்கள் எனவும் தகவல் வெளியானது.

இந்தநிலையில் இந்திய ரயில்வே இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பயணிகள் ரயில்களை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து எந்த ஒரு பரிசீலனையும் தற்போது இல்லை என இந்திய ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்