• மணப்பாறை அருகே பொதுத்தேர்வை முடித்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள், வகுப்பறை பொருட்களை சேதப்படுத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
• திருச்சி மாவட்டம் புத்தானத்தத்தில் அரசு மேல்நிலை பள்ளியில், சுமார் 320 பேர் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர் .
• இந்தநிலையில் இறுதி தேர்வு முடிந்ததும் பள்ளியிலுள்ள 17 வகுப்பறைகளில், மின் விசிறிகள், மின் விளக்குகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டுள்ளன.
• இதுதொடர்பாக போலீசார் நடத்தி வரும் விசாரணையில், 4 மாணவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.