தற்போதைய செய்திகள்

சாலையோரம் சென்றவர்களை அசுர வேகத்தில் மோதிய லாரி.. 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி

தந்தி டிவி

வைஷாலி மாவட்டம் டெசரி காவல் எல்லைக்குட்பட்ட சுல்தான்பூர் கிராமத்தில், பொதுமக்கள் சாலையோரம் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற லாரி ஒன்று, அவர்கள் மீது மோதியது.

இதில், 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

பலர் படுகாயமடைந்துள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை