தற்போதைய செய்திகள்

சாலையோரம் சென்றவர்களை அசுர வேகத்தில் மோதிய லாரி.. 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி

தந்தி டிவி

வைஷாலி மாவட்டம் டெசரி காவல் எல்லைக்குட்பட்ட சுல்தான்பூர் கிராமத்தில், பொதுமக்கள் சாலையோரம் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற லாரி ஒன்று, அவர்கள் மீது மோதியது.

இதில், 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

பலர் படுகாயமடைந்துள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்