தற்போதைய செய்திகள்

பூசாரிக்கே "விபூதி" அடித்த மர்ம ஆசாமிகள்..11 பவுன் தங்க நகைகள் "அம்பேல்"

தந்தி டிவி

நெல்லை ஆவரைக்குளம் முத்தாரம்மன் கோயிலில் அர்ச்சனை செய்வது போல் நடித்து பூசாரியைத் திசை திருப்பி அம்மன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கோயிலுக்கு பக்தர்கள் வேடத்தில் வந்த மர்ம நபர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்வது போல் நடித்து பூசாரியை திசை திருப்பி உள்ளனர். அர்ச்சனைக்காக பூசாரி கோயில் பிரகாரத்தை சுற்றி வந்த போது, முத்தாரம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 11 பவுன் தங்க நகைகளுடன் அந்த ஆசாமிகள் தப்பி ஓடியுள்ளனர். கோயிலில் சிசிடிவி கேமரா செயல்படாமல் போனது திருடர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்