தற்போதைய செய்திகள்

11 இஸ்லாமியர்கள் உயிரிழப்பு வழக்கு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 67 பேர் விடுதலை

தந்தி டிவி

குஜராத் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 67 பேரை நேற்று விடுதலை செய்தது அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம். குஜராத் மாநிலம் நரோதா கிராமத்தில் கடந்த 2002ம் ஆண்டு பெரும் வகுப்புவாத கலவரம் ஏற்பட்டது. இதில் வீடுகளுக்கு வைக்கப்பட்ட தீயில் 11 இஸ்லாமியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கானது அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் இறுதி தீர்ப்பை நேற்று வழங்கிய நீதிபதி எஸ்.கே. பக்ஸி, குற்றம் சாட்டப்பட்ட 67 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார். இந்த 67 பேரில் பாஜக முன்னாள் அமைச்சர் மாயா கோத்நானி, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் ஜெய்தீப் படேல், பஜ்ரங்தள முன்னாள் தலைவர் பாபு பஜ்ரங்கி ஆகியோரும் அடங்குவர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ