தற்போதைய செய்திகள்

100 நாள் வேலை திட்ட கணக்கெடுப்பில் குளறுபடி... ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

தந்தி டிவி

100 நாள் வேலைத் திட்ட அட்டையில் ஏழைகளின் விவரம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலம் எடுக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் இந்த பதிவு நடைபெற்று வருகின்றது. ஆனால் இந்த சங்கத்தின் மூலம் எடுக்கப்பட்ட தரவுகள் முற்றிலும் தவறாக இருப்பதாகவும் இதில் முறையாக ஏழைகளின் விபரங்களை பதிவு செய்யாமல் வசதி வாய்ப்பு உள்ளவர்களை பதிவு செய்து இருப்பதாகவும் குற்றம் சுமத்தி, மறு தரவு செய்து புதிதாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சிவகங்கை, காளையார் கோவில், முத்தூர், வானியங்குடியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அப்பெண்களைத் தடுத்து நிறுத்திய போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தார். மனுவை பெற்று கொண்ட அவர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்