தற்போதைய செய்திகள்

"10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... சிறுமியை வன்கொடுமை செய்த 6 சிறுவர்கள்" - திருச்சி அருகே அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

திருச்சயில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய 6 சிறுவர்களை போலீசார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர்.

திருச்சி விமான நிலையம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியின் தாயார் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது 10 வயது மகள் அழுது கொண்டே வந்ததாகவும், சிறுமியிடம் கேட்ட போது 6 சிறுவர்கள் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்து இருக்கிறார். மேலும் வன்கொடுமை செய்ததை வீடியோ எடுத்து வைத்து கொண்டு மிரட்டுவதாகவும் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் 6 சிறுவர்களையும் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு