கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் பிரியங்கா, அமெரிக்காவில் இருந்து பறந்து வந்து, தமது ஜனநாயக கடமையை ஆற்றினார். இவர், அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து வரும் நிலையில், கர்நாடக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமது வாக்கை பதிவு செய்வதற்காக, விடுமுறை எடுத்துக்கொண்டு விமானம் மூலம் பெங்களூரு வந்தார். பின்னர், பெங்களூரில் இருந்து சாலை மார்க்கமாக தமது சொந்த ஊருக்கு சென்று வாக்கை பதிவு செய்திருக்கிறார் பிரியங்கா.