கேரளாவில் இன்ஸ்டா பிரபலம் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது ஆண் நண்பருடன் தற்கொலை செய்துகொண்டார்.
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் ரேஸ்மா. அவருக்கு திருமணம் ஆகி 4 வயதில் மகன் உள்ள நிலையில், கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து சந்தேஷ் என்பருடன் லிவ்விங்டூகெதர் உறவில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 9 தேதி ரேஸ்மா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தேஷ்-ம் தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.