ஈரான் போர் எதிரொலியாக நாடு முழுவதும் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரீமியம் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது....
அதிகபட்சமாக லிட்டருக்கு 2 ரூபாய் 35 காசுகள் அதிகரித்த நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பிரீமியம் பெட்ரோல் 109 ரூபாய் 61 காசுகளுக்கு விற்பனையாகிறது...
தொழில்துறை எரிபொருட்களின் விலையை இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளன...
எல்.டி.ஓ எனப்படும் Light Diesel Oil லிட்டருக்கு 22 ரூபாய் முதல் 28 ரூபாய் வரை அதிகரித்துள்ளது...
LPG சிலிண்டர் விநியோகம் இயல்பாக உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது...
இதுவரை தட்டுப்பாடு எதுவும் பதிவாகவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது...
வீட்டு உபயோக சிலிண்டர் உற்பத்தி 40% அதிகரித்துள்ளது...
அனைத்து மாநிலங்களிலும் போதுமான அளவு LPG கையிருப்பு உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கூறியுள்ளது...
தமிழகத்தில் பள்ளிகளுக்கு, ஏப்ரல்16 முதல் மே 31 ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது......
முழு ஆண்டு தேர்வுகள் முடிவடையும் நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது......