உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.......கோவிந்தா... கோவிந்தா என்ற பக்தி முழக்கம் விண்ணதிர, வழிநெடுகிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை வழிபட்டனர்...
தங்கக் குதிரை வாகனத்தில், பச்சை பட்டுடுத்தி பக்தர்களுக்கு கள்ளழகர் அருள் பாலித்தார்.....அழகரை குளிர்விக்க வழிநெடுகிலும், அவர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து பக்தர்கள் அன்பை வெளிப்படுத்தினர்....
கொல்கத்தாவில் வாக்கு எண்ணும் மையத்தில், கட்சி முகவர்கள் இல்லாத நேரத்தில் ஈ.வி.எம். எந்திரங்கள் திறக்கப்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.....தேர்தல் ஆணையமும், பாஜக-வும் இணைந்து ஜனநாயக படுகொலையை நிகழ்த்துவதாக அக்கட்சி வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சியால் பரபரப்பு நிலவுகிறது..
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் முறைகேடு நடப்பதாகத் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ள நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்......ஜனநாயகத்தைக் காக்க நாங்கள் எதையும் செய்வோம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்...
கொல்கத்தாவில் வாக்கு எண்ணும் மையத்தில் முறைகேடு நடப்பதாகத் திரிணாமுல் காங்கிரஸ் முன்வைத்த புகார்களைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது....தபால் வாக்குகளைப் பிரிக்கும் பணிகளே அங்கு நடைபெற்றதாக ஆணையம் விளக்கம் அளித்துள்ளது....
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
சித்ரா பெளர்ணமி மற்றும் தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் தென் மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.....பேருந்து, கார்கள் மூலம் பொதுமக்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டதால் கிளாம்பாக்கத்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஆமை போல் ஊர்ந்து சென்றன...