வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது... இறுதிப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், உடனடியாக விண்ணப்பித்தால் மட்டுமே வரும் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை ஏப்ரல் 2 ஆம் தேதி திருவாரூரில் தொடங்குகிறார்... ஏப்ரல் 21ஆம் தேதி தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்...
பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து காவல்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்... தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி கேட்டு தவெக மனு அளித்திருந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கின்றனர்...
புதுச்சேரியில் வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது...திமுக போட்டியிடும் 5 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் திரும்ப பெற போவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது...
திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதற்கான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது... திமுக பேச்சுவார்த்தை குழுவினருடன் ஒரு மணி நேரம் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆலோசித்த நிலையில், இன்று மாலை மீண்டும் ஆலோசனை நடைபெறுகிறது....
போட்டியிடும் தொகுதி குறித்து திமுக குழுவினருடன் மதிமுக தொகுதி பங்கீடு குழுவினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்...திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....