தமிழகத்தில் 5 இடங்களில் இன்று வெயில் சதம் அடித்துள்ளது...
அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் மற்றும் வேலூரில் 102.92 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது...
நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான தடியடியை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் அமளி......
மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக்கோரி அமளியில் ஈடுபட்டதால் 4வது நாளாக இரு அவைகளும் முடங்கின......
நீட் வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்...
நீட் வினாத்தாளை கசியவிட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்...
இளைஞர்களின் எதிர்காலத்தை விட முக்கியமானது எதுவுமில்லை என்றும், மாணவர்களின் நலனை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்...
இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்...
பிரதமரின் விரைவு நீதிமன்ற அறிவிப்பை நிராகரிப்பதாக 'காக்ரோச் ஜனதா கட்சி' தெரிவித்துள்ளது...
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தல்...