மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான் ...
நீட் வினாத்தாள கசிவு விவகாரத்தை முன்வைத்து காக்ரோச் ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், பதவி விலகினார்...
இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ராஜினாமா செய்வதாக தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்...
மாணவர்களை சிலர் தவறாக வழிநடத்தி இடையூறு ஏற்படுத்த முயன்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்...
நீட் விவகாரத்தில், கடந்த 10 நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் மனவேதனை அளிப்பதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்...
இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்...
பிரதான் ராஜினாமா செய்தது குறித்து பேசிய CJP தலைவர் அபிஜித் தீப்கே, பயப்படாமல் போராடினால் யாரையும் ராஜினாமா செய்ய வைக்க முடியும் என தெரிவித்தார்...
நாம் நினைத்ததை செய்து காட்டி விட்டோம் எனவும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்...
மாணவர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அபிஜித் தீப்கே வலியுறுத்தியுள்ளார்...
நீட் தேர்வால் உயிரிழந்தவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்...