திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து நீடிக்கும் இழுபறி...
இன்று அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைமையின் அறிவிப்பிற்காக காத்திருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்..
திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது...
பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்தார்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது...
மாநிலங்களவை தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது...
புதுச்சேரியிலும் தேமுதிகவிற்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது...
அதேபோல், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது...
திருச்சி மண்டல ரயில்வே அலுவலக கல்வெட்டில் உள்ள இந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல்...
இந்தியில் எழுதப்பட்டதற்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் முடிவு...