ஸ்லோவாக்கியா நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோ-உடன் Robert Fico பேச்சுவார்த்தை நடத்தினார்...
இருநாட்டு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்...
ஸ்லோவாக்கியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் AI இந்தியா இருக்கை அமைக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...
இந்தியா - ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் ஒத்துழைப்பு வழங்கியதற்காக, ஸ்லோவாக்கியாவுக்கு பிரதமர் மோடி நன்றி கூறியுள்ளார்...
பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியா நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ்' வழங்கப்பட்டது...
இருநாட்டு உறவை வலுப்படுத்தியதற்காக வழங்கப்பட்ட இந்த விருது, பிரதமர் மோடி பெறும் 33-வது சர்வதேச விருதாகும்...
ஸ்லோவாக்கியாவின் உயரிய விருதை140 கோடி இந்திய மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...
இந்தியா - ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு இடையேயான நீடித்த நட்புறவுக்கு விருதை சமர்ப்பிப்பதாகவும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்...
ஸ்லோவாக்கியாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்..
தன்னை காண கூடியிருந்த இந்தியர்களை பார்த்து, பிரதமர் கையசைத்து மகிழ்ந்தார்...