சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன், துணை தேர்தல் ஆணையர்கள் சென்னையில் ஆலோசனை நடத்தினர்.. வருமான வரித்துறை, சுங்கத் துறை, காவல்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறையின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், ஆலோசனைக் கூட்ட்டத்தில் பங்கேற்றனர்..
தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தேர்தல் துணை கமிஷ்னர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்...கலவரம் ஏற்படும் வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட உள்ளது..
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்... தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்...
சேலத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று நடைபெறுகிறது....... நண்பகல் 12 முதல் மாலை 3 மணிக்குள் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க, 4 ஆயிரத்து 998 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது....