சட்டமன்ற தேர்தல் - 11,323 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சட்டமன்ற தேர்தலையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன...
நாளை வரை 11 ஆயிரத்து 323 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக, போக்குவரத்து துறை அறிவித்துள்ளது..
தமிழ்நாட்டில் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது...
48 மணி நேரத்திற்கு, கூடுதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன...
வாக்காளர் அல்லாதோர் தொகுதிகளில் இருந்து வெளியேற்றம்
பிரசாரம் ஓய்ந்த நிலையில், வாக்காளர் அல்லாதோர் தொகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்..
டிஜிட்டல் பிரசாரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விதிமுறைகள் மீறப்பட்டால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது..
விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டு சிறை
தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது...
மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்...
களத்தில் 4,023 வேட்பாளர்கள்
தேர்தல் பணியில் 3.40 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..
326 தேர்தல் பார்வையாளர்களையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது..
326 தேர்தல் பார்வையாளர்கள்