வினாத்தாள் கசிவு எதிரொலியாக, நாடு முழுவதும் நீட் மறுதேர்வு இன்று நடக்கிறது....மதியம் இரண்டு மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு...
நாடு முழுவதும் 551 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 5 ஆயிரத்து 440 மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெறுகிறது....22 லட்சத்து 79 ஆயிரம் பேர் தேர்வெழுதும் நிலையில், 6 ஆயிரத்து 669 ஊழியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்...
தமிழ்நாட்டில், 31 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 307 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 489 பேர் நீட் மறுதேர்வை எழுத உள்ளனர்...தமிழகத்திற்கான நீட் தேர்வு மேலிட கண்காணிப்பு அதிகாரியாக மாலதி என்பவரை தேசிய தேர்வு முகமை நியமித்துள்ளது...
நாடு முழுவதும் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதும் நீட் மறுதேர்வுக்கான பாதுகாப்புப் பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்..முறைகேடுகளைத் தடுக்க 1 லட்சத்து 38 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் மற்றும் 51 ஆயிரம் ஜாமர்கள் தேர்வு மையங்களில் பொருத்தப்பட்டுள்ளன...
ஈரோட்டில் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு வினாத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது...இதேபோல் புதுக்கோட்டையில் உள்ள தேர்வு மையங்களுக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் உதவியுடன் வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டது...
நீட் மறுதேர்வில் எந்தவொரு குளறுபடியும் ஏற்பட மத்திய அரசு அனுமதிக்காது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார்...தேசிய தேர்வு முகமை மற்றும் மாநில அரசுகள் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்...