Coimbatore || பயணியின் உயிர் காத்த ஓட்டுநர், நடத்துநர் - குவியும் பாராட்டு ஊட்டியிலிருந்து கோவை நோக்கிச் சென்ற அரசு பேருந்து மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப் பாலம் அருகே வந்தபோது, பயணி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.. இதைக் கண்ட நடத்துநர் சோமசுந்தரம் உடனடியாக ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, ஓட்டுநர் கிரண் பேருந்தை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்... மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பயணியின் உயிர் காப்பாற்றப்பட்டது. இதனையடுத்து துரிதமாகச் செயல்பட்டுப் பயணியின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்குப் பொதுமக்களும் பயணிகளும் பாராட்டு தெரிவித்தனர்...