• காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசி மாத பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
• வெள்ளை நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மல்லிகைப்பூ, மாலைகள் அணிந்து, லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் காமாட்சி அம்மன் எழுந்தருளினார்.
• பின்னர், மேள தாளம், பேண்டு வாத்தியங்கள் முழங்க, காஞ்சிபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தார்.
• வழிநெடுகிலும் பக்தர்கள் ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்தனர்.