முக்கிய செய்திகள்

தாம்பரம், ஆவடி போலீசார்களுக்கு திடீரென உண்டான மன மாற்றம் - அதிர்ச்சியில் காவல்துறை

தந்தி டிவி
• ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் பணியாற்றும் போலீசாருக்கு, 'கிரேடு'க்கு ஏற்றவாறு, மாதந்தோறும் வழங்கப்படும் உணவுப்படி கடந்த 3 மாதமாக வழங்கவில்லை என கூறப்படுகிறது. • இதனால் ஆவடி காவல் ஆணையரகத்தில் 4 ஆயிரத்து 623 போலீசாரும், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் 3 ஆயிரத்து 600 போலீசார் என 8 ஆயிரத்து 223 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். • இது குறித்து காவல் ஆணையரகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, இத்தனை ஆண்டுகளாக கொடுக்கப்பட்ட உணவு படி திடீரென குறைக்கப்பட்டுள்ளதாகவும், 3 மாதங்களாக படி கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். • இந்த பிரச்சனையால் ஆயுதப்படையில் பணியாற்றும் பல போலீசார் சொந்த ஊருக்கு இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக கூறிய அவர், விரைவில் அதற்கான தீர்வு ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்