முக்கிய செய்திகள்

#BREAKING || பணப்பட்டுவாடா புகார்- டிஜிபி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

தந்தி டிவி

இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார்

டி.ஜி.பி. விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

ஈரோடு கலெக்டரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது -ஈரோடு கிழக்கு தொகுதி யில் தி.மு.க. கூட்டணி போது செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்ற அமைச்சர் கே.என்.நேரு வும், வேட்பாளர் ஈ.வி. சாகு -கே.எஸ். இளங்கோவனும் அருகருகே இருந்துபேசிக் கொண்ட வீடியோ வெளி யாகி பெரும்" பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சார்பில் துணைத் தலைவர்கள், வழக்கறிஞர்பால் கனகராஜ், கே.பி.ராமலிங்கம், நாரா யணன் திருப்பதி உள்ளிட்டநிர்வாகிகள் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் புகார் அளித்த னர். அமைச்சரின் பேச்சு அடங்கிய ஆடியோ. வீடியோ . ஆதாரங்களையும் வழங்கினர்.

முறையான தேர்தல்நடை பெற வருவாய், காவல்துறை அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமா ரும் புகார் கொடுத்தார். தேர்தலை முறையாக நடந்துவதற்கு தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புகாரில் கூறி இருந்தர்

இந்த புகார் மீது தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இப்போது நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளார். டி.ஜி.பி‌ சைலேந்திரபாபு மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி ஆகியோரி டம் விளக்கம் கேட்டு நடந்த சம்பவத்தை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு சத்யபிரதா சாகு உத்தரவிட்ட உள்ளார்

இந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும் இந்திய தேர்தல் கமிஷனுக்கு அதை அனுப்பி வைக்க உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை