முக்கிய செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு.. ஐகோர்ட்டில் உத்தரவுக்காக இன்று பட்டியலிடப்படவில்லை

தந்தி டிவி
• அதிமுக பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயரநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். • இந்த வழக்குகளை கடந்த 22-ஆம் தேதி விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, தீர்ப்பை தள்ளி வைத்தார். • இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், வழக்குகள் இன்று பட்டியலிடப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. • ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்துவிட்டு, நீதிபதியிடம் தெரிவிக்கும்போது, எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. • மேலும், இந்த வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு