முக்கிய செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு.. ஐகோர்ட்டில் உத்தரவுக்காக இன்று பட்டியலிடப்படவில்லை

தந்தி டிவி
• அதிமுக பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயரநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். • இந்த வழக்குகளை கடந்த 22-ஆம் தேதி விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, தீர்ப்பை தள்ளி வைத்தார். • இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், வழக்குகள் இன்று பட்டியலிடப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. • ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்துவிட்டு, நீதிபதியிடம் தெரிவிக்கும்போது, எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. • மேலும், இந்த வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை