முக்கிய செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு.. ஐகோர்ட்டில் உத்தரவுக்காக இன்று பட்டியலிடப்படவில்லை

தந்தி டிவி
• அதிமுக பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயரநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். • இந்த வழக்குகளை கடந்த 22-ஆம் தேதி விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, தீர்ப்பை தள்ளி வைத்தார். • இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், வழக்குகள் இன்று பட்டியலிடப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. • ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்துவிட்டு, நீதிபதியிடம் தெரிவிக்கும்போது, எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. • மேலும், இந்த வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு