ஓட்டுக்கு பின் காவலர் வெளியிட்ட வீடியோ...அடுத்த நொடியே பாய்ந்த வழக்கு

Update: 2024-04-18 04:51 GMT

#thanthitv #elections2024 #loksabhaelection2024 #sivagangai

ஓட்டுக்கு பின் காவலர் வெளியிட்ட வீடியோ...அடுத்த நொடியே பாய்ந்த வழக்கு

சிவகங்கையில், தான் யாருக்கு ஓட்டு போட்டேன் என்பதை, வீடியோவாக வெளியிட்ட போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காளையார் கோவில் அருகே வேம்பனியை சேர்ந்தவர் சதீஷ்குமார். மத்திய ரிசர்வ் போலீசில் உள்ள இவர், சமீபத்தில் தபால் ஓட்டு போட்டார். அப்போது, தான் யாருக்கு ஓட்டு போட்டேன் என்பதை வீடியோவாக எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில், சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்