ஒற்றை செய்தித்தாளால் திமுக - பாஜக இடையே முற்றிய வாக்குவாதம் பல்லடத்தில் பரபரப்பு

Update: 2024-04-18 04:23 GMT

#thanthitv #bjp #dmk #elections2024 #palladam

ஒற்றை செய்தித்தாளால் திமுக - பாஜக இடையே முற்றிய வாக்குவாதம் பல்லடத்தில் பரபரப்பு

பல்லடத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பா.ஜ.க. விளம்பரங்கள் அச்சிடப்பட்ட செய்தித் தாள்களை பொதுமக்களுக்கு விநியோகித்த நபர்களை பிடித்து திமுகவினர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்நிலையில், பல்லடம் நகர் பகுதியில் பா.ஜ.க.வின் சாதனைகளை விளக்கும் "தி கோவை மெயில்" என்ற செய்தித் தாள்களை பொதுமக்களுக்கு விநியோகித்துவந்த 3 பேரை சுற்றிவளைத்து திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில், 2 பேர் தப்பியோடிய நிலையில், கோவையைச் சேர்ந்த பிரவீன்குமார் என்ற நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்