"ராகுல் காந்திக்கு தைரியம் இல்லை" - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பரபரப்பு பேச்சு

Update: 2024-04-19 02:20 GMT

"ராகுல் காந்திக்கு தைரியம் இல்லை" - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பரபரப்பு பேச்சு

#rahulgandhi | #thanthitv | #kerala

கேரளாவில் காசர்கோடு, கண்ணூர் மற்றும் வடகரா ஆகிய மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சி.ஏ.ஏ சட்டத்தின் கீழ் எந்த ஒரு இந்தியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என்றார். டெல்லியில் நட்புடன் இருக்கும் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், கேரளாவில் சண்டையிட்டுக்கொண்டு இரட்டை ஆட்டம் ஆடுவதாக விமர்சித்த ராஜ்நாத் சிங், அவர்களை கேரளாவை விட்டு விரட்டியடிக்க வேண்டும் என்றார். கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த ராகுல்காந்தி, இந்தமுறை அங்கு போட்டியிட அவருக்கு தைரியம் இல்லை என்றும், இந்த முறை கேரளாவிலும் தோல்வியடைவார் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்