பிரசாரம் முடிந்த கையோடு கருணாநிதி நினைவிடம் சென்ற தந்தை, மகன்

Update: 2024-04-18 02:36 GMT

பிரசாரம் முடிந்த கையோடு கருணாநிதி நினைவிடம் சென்ற தந்தை, மகன்

#elections2024 #cmstalin #udhaynidhistalin

தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாட்டில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. முன்னதாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். இறுதி நாளான நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையிலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையிலும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரசாரம் நிறைவடைந்ததை தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்