நாளை நடக்கப்போகும் தேர்தல்.. பிரசாரத்தின் கடைசி நொடியில் முதல்வர் போட்ட பரபரப்பு ட்வீட்

Update: 2024-04-18 02:34 GMT

நாளை நடக்கப்போகும் தேர்தல்.. பிரசாரத்தின் கடைசி நொடியில் முதல்வர் போட்ட பரபரப்பு ட்வீட்

#cmstalin #electioncampaign #thanthitv #pmmodi

மோடி ஆட்சிக்கான முடிவுரையை தமிழ்நாட்டு மக்கள் எழுத தொடங்கும் நாள் "ஏப்ரல் 19" என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். நாளை வாக்குப்பதிவை முன்னிட்டு X சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியா கூட்டணியின் வெற்றிக்கணக்கைத் தமிழ்நாட்டில் தொடங்கி எழுதுவோம் என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் வருங்காலத்தைத் தமிழ்நாடுதான் தீர்க்கமாக எழுதப் போகிறது என பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொடங்கி, நாடெங்கும் இந்த உணர்வுத் தீ பரவட்டும் என பதிவிட்டுள்ளார். இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்